கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரபள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் 6,7,8- ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் 9 பேர் சிறந்த ஓவியம் வரைந்ததற்காக வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுனிதா கலந்து கொண்டார். இதனையடுத்து தனியார் நிறுவன மேலாளர் அனில் குமார் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.