உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அந்த நபருக்கு நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸப் டிபியாக வைத்தால் கூட ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நிபந்தனை விதித்தே நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.