செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வைரமுத்து என்ன சொல்லிருக்கார் ? தனக்கு திருக்குறளும் தெரியாதுங்குறத அப்பட்டமா எடுத்து காட்டி இருக்கார். வள்ளுவர் சொன்னதுதானே… உதயநிதி சொல்லி இருக்கார்ன்னு…. வள்ளுவர் என்ன சொன்னார்? பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் .. அதே தான் கண்ணன் சொல்லிருக்கான் கீதையில….. கண்ணன் கீதையில சொன்னதை தான் வள்ளுவர் திருக்குறள்ல சொல்லிருக்காரு..

அதுல என்ன சொல்லி இருக்கார்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் – அதில் தொழில்  ஒன்னு இல்ல. அதுதான் கண்ணன் சொல்றாரு…  நான் நான்கு வர்ணங்களை அமைத்து இருக்கிறேன். எதன் அடிப்படையில் ? குணா குவாலிபிகேஷன், கர்மா ஜாப். எங்கேயாவது பர்த்ன்னு  சொல்லி இருக்காரா ? இல்ல. உங்களுக்கு நான் பல உதாரணங்களை சொல்றேன்…

விசுவாமித்திரர் சத்திரியரா பிறந்தார். ஆனால் தபஸின் மூலமா பிராமணரானார். அதே மாதிரியா வேதத்தை தந்த வேத வியாசர் மச்சகந்தி என்கின்ற செண்பக தாய்க்கு மகனாக பிறந்தவர். அவர் எப்படி  ரிஷி ஆனார்? ஆகவே அந்த காலத்துல வர்ணங்கள் மாறுவதும்…  வர்ணங்களிலே பேதங்கள்  இல்லாமல் இருந்ததும் நம்மால்  பார்க்க முடியுது.

இப்ப இருக்கிற ஜாதி….  இந்த அடிப்படைகள் எல்லாம் அன்னைக்கு ஒன்னும் இருந்ததில்லை. அன்னைக்கு சொன்னது எவ்வளவு நாலு வர்ணம்? நீ இப்போ 4800 ஜாதி வச்சிருக்க. இதுக்கு யாரு பிராமணரா பொறுப்பு ? இல்ல இந்து மதம் பொறுப்பா? சனாதன தர்மம் பொறுப்பா ?  மூளை வேண்டாம்.

நான் விவாதத்துக்கு தயார்…  நீ மொத மன்னிப்பு கேட்டுப்புட்டு சின்மயி கிட்ட…  எங்க கிட்ட கேக்க வேணாம். சின்மயி கிட்ட மன்னிப்பு கேட்டுப்புட்டு நீ விவாதத்துக்கு வந்தினா…  நான் வரேன். வள்ளுவர் நான்கு வர்ணம் பற்றியும் பேசி இருக்கார். நீ இல்ல சொல்லு. அந்தணர்…. ஏன்னா முதல் பத்துப்பாட்டு பாட்டுலயே அந்தணர் தான் சொல்லுவாரு.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் . அதுக்கு அடுத்து அரசர்,  வணிகர். ஆக வணிகரை பத்தியும் பேசி இருக்காரு. மூணு வர்ணம் ஆச்சா ?  வேளாளர்… என நாலு வர்ணமும் பேசியிருக்கார். ஆகவே வள்ளுவர் சொன்னதை  உனக்கு படிக்க தெரியல… படிக்காத அரைகுறை… முட்டாள் நீ எதுக்கு வள்ளுவர் கோர்  பண்ற..  ஆகவே ”மி டூ” வைரமுத்துக்கு காலம் முடிஞ்சு போச்சு. ரொம்ப பேசாம இருந்தேன்னா….  மானம் பொழைக்கும்,  இல்லனா….  மானமும் போயிரும் என தெரிவித்தார்.