மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், அதிமுக துணை இல்லாமல் பாஜக வெற்றி பெற 66 முடியாது.

கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவை விமர்சிக்கும் அண்ணாமலைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக தொண்டர்கள் இனி பொறுக்க மாட்டார்கள். அண்ணாமலைக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.