இந்தியாவில் பிரதான் மந்திரி சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்த 14-வது தவணை தொகை பணத்தை பெறுவதற்கு விவசாயிகள் கேஒய்சி சரிபார்ப்பை உடனே முடிக்க வேண்டும்.

அனைத்து வகை சரிபார்ப்புகளையும் முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும். இந்நிலையில் 13-வது தவணை தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு 14-வது தவணை தொகையோடு சேர்த்து 4000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை முழுமையாக பெறுவதற்கு உடனடியாக பிஎம் கிசான் திட்டத்தின் அதிகார பூர்வை இணையதளத்திற்குள் சென்று கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.