சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் போன்றோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனப்பால், ராஜசேகர் போன்ற 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு நேற்று ஏற்றுகொண்ட நிலையில், ஜனாதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். புதியதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் விரைவில் பதவியேற்பர் என சொல்லப்படுகிறது. இதன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 65-ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.