மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் அவர் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பாஜக அரசு தடுக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மணீஸ் சிசோடியா கைது செய்யப்பட்டது குறித்து பதில் அளித்த அவர் பாஜகவில் இணைந்தால் நாளையே மணீஸ் சிசோடியா விடுதலை ஆகிவிடுவார் என்றார்.

ஆம் ஆத்மி பஞ்சாபில் வெற்றி பெற்றதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அமைச்சர்கள் சிறந்த திட்டங்கள் மூலம் பெருமைப்படுத்தியுள்ளனர் என்றும் கூறினார். பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேஷ், குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை போன்று சிறந்ததாக மாற்ற முடியவில்லை என்றும் அதே நேரத்தில் டெல்லியில் இந்தப் பணி தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.