செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்…  இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ?  அழுவதா ? என்று தெரியவில்லை.  எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும் ?  இது ஆர்எஸ்எஸ்_ஸின் தி என்ற ”சிங்கிள் லைன்” டயலாக் திருமாவளவன் வைத்திருக்கிறார்.

இதைத்தவிர மேலையும் போகமாட்டார், கீழேயும் போக மாட்டார். ஏனென்றால் தோழமை சுடுதல்..  அந்த அளவுக்கு துரதிஷ்டவசமாக தமிழகத்தில் சில அரசியல் கட்சியின் தன்மை. இதுல என்னாச்சு ? என்றால் சாயம் வெளுத்து விட்டது. மக்களுக்கு தெரிந்து விட்டது. யார் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள் ? யார்  தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக  குரல் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உடல்நல குறைவு பற்றி கருத்து சொல்ல விரும்பல. எல்லாரும் உடல் ஆரோக்கியமாக இருக்கணும். மக்களுக்கான அமைச்சர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கின்றேன். மதுரையில் நடப்பது அதிமுகவினுடைய மாநாடு.  அவர்களுடைய பொன்விழா மாநாடு. மிகச் சிறப்பாக செய்யட்டும்,  எங்களுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.