திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று பெற்றோர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய குழந்தைகளை பார்த்து கொள்ள  நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார் திராவிட மாடல் அரசு இருக்கிறது என்று,  சந்தோஷத்தோடு வாழ்த்தி….  மன நிறைவோடு பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.  முதலமைச்சர் உடைய காலை உணவு திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 17 லட்சம் மாணவர்கள்…. 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால்,  சில மாதங்களுக்கு முன்பு  தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அரசு அதிகாரிகள் எல்லாம் வந்து,  எப்படி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள் ? எங்களுடைய மாநிலத்திலும் செயல்படுத்த போகிறோம் என்று அந்த திட்டத்தை  பார்த்துட்டு போயிருக்கிறார்கள். இது தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம்….  செய்யவே முடியாது என்று அதிமுக சொன்ன திட்டம்…. அது என்னவென்றால்,

கலைஞர் மகளிர் உரிமை தொகை  திட்டம். மகளிருக்கு 1000 ரூபாய் மாதம் தோறும்… இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் மகளிர் இந்த திட்டத்தினால் பயன்பெற்று இருக்கிறார்கள். ஒரு  திட்டத்தை அறிவித்தால்,  பொதுவாக காலம் தாமதம் ஏற்படும் . நிதி நெருக்கடி காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு…  இந்த திட்டத்தையும் பல்வேறு மாநிலங்கள் நாங்களும் செயல்படுத்த போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி 17 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் பயன்படுகிறார்கள். ஒரு திட்டத்தை அறிவித்தால் போய் சேர்வதற்கு ஒரு நாள் இரண்டு நாள் தாமதமாகும்…  நம்முடைய தலைவர் என்ன பண்ணார் என்றால்,  செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் உடைய பிறந்தநாள்… அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வரும் என்று சொன்னார்… ஆனால் தலைவர் என்ன பண்ணார் என்றால், 14ஆம் தேதி அனுப்பி விட்டார்.

இந்த மாதம் 3ஆவது மாதம் கொடுத்து இருக்கிறோம்… 15 ஆம் தேதி தான் கொடுக்க வேண்டும்….  ஆனால் தீபாவளி பண்டிகை வருகிறது…. மக்கள் சந்தோஷமாக இருக்கட்டும்…. மகிழ்ச்சியாக இருக்கட்டும் என பத்தாம் தேதியே ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு இந்த திட்டம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த திட்டத்ம்… இந்த நாளே திட்டம்  மனதில் வைத்துக் கொள்ளுங்கள். யாராவது ஏதாவது குறை சொன்னார்கள் என்றால்,  இந்த திட்டத்தை பற்றி பேசுங்கள், கேளுங்கள் என தெரிவித்தார்.