கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனியார் கல்லூரி மாணவர் நிதீஷ்குமார் என்பவர் கல்லூரி வேனில் சென்று கொண்டிருந்த போது அண்ணாமலை என்ற மாணவர் கத்தியால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிய நண்பர்களான இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அண்ணாமலை நிதீஷ்குமாரை தன்பாலின ஈர்ப்பால் காதலித்துள்ளார்.

அண்ணாமலையின் நடவடிக்கையை தெரிந்து கொண்ட நிதீஷ்குமார் அவரின் நட்பை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவர் அண்ணாமலை கல்லூரி செல்லும் போது நிதீஷ்குமாரின் கழுத்தை அறுத்துள்ளார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குற்றவாளியை பிடித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.