தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் வலுபெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக மாறும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக வலுபெற்றதும் அதற்கு மியான்மர் பரிந்துரைத்த ‘மிக்ஜாம்’ என பெயர் சூட்டப்பட உள்ளது.