கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை ஈடு செய்யும் பொருட்கள் வருகிற ஜனவரி மாதம் 6- ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார்.