கரூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட இருக்கிறது.

இதனால் கரூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் வருகிற 30-ஆம் தேதி முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தொடங்கப்பட உள்ள பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.