நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாத கடை வாடகை போன்றவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் வரி செலுத்தாத தொழில் கூடங்கள் தொழில் உரிமம் ரத்து செய்வதுடன் அவர்களின் மின் இணைப்பு துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் ஆணையாளர் கணேசன் கூறியுள்ளார். மேலும் மலை அடிவார பகுதியில் குடிநீர் கட்டணம் கட்டாத இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்து வருகின்றனர்.