தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் 12 வயதில் நடிக்க தொடங்கிய நிலையில் 1999-ம் ஆண்டிலிருந்து சீரியல்களில் நடித்து வருகிறார். மெட்டி ஒலி, சித்தி போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமான சாந்தி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1979-ம் ஆண்டு மலையாள சினிமா கேமராமேன் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது அவருடைய கணவருக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் வீட்டில் ஏகப்பட்ட கார்கள் இருந்ததாம். ஆனால் கடந்த 1996-ம் ஆண்டுக்கு பிறகு படங்களை எடுத்து நஷ்டமாகியதால் சொந்த வீடு உட்பட அனைத்தையும் இழந்து குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்துள்ளார். கேகே நகரில் உள்ள அவருடைய வீட்டின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும். மேலும் பழைய நிலைக்கு திரும்ப தற்போது பயங்கரமாக உழைத்து வருவதாக கூறியுள்ளார்.