கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை மேல தெருவில் ஜஸ்டின் என்பவர் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார் இவர் ஒரு செவ்வாழை கொலையை விற்பனை செய்வதற்காக வியாபாரியிடம் இருந்து வாங்கினார். இதனையடுத்து அந்த வாழைக்குலை பழுத்த பிறகு உறையிலிருந்து எடுத்து பார்த்துள்ளார்.

அப்போது வாழைப்பழங்கள் இரண்டு நிறத்தில் இருந்ததை கண்டு ஜஸ்டின் ஆச்சரியமடைந்தார். அதில் ஒரு புறம் சிவப்பு நிறத்திலும், மறுபுறம் பச்சை நிறத்திலும் பழங்கள் இருந்தது. இந்த அதிசய வாழை குலையை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.