டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்றவரை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்துள்ளது..

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், கொலையாளியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கொலையாளி சிறுமியை கொடூரமாக பலமுறை குத்திய வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், ஆத்திரத்தில் பலமுறை கத்தியால் குத்துகிறார்,இறுதியில் பெரிய கல்லை எடுத்து சிறுமி மேலே போடுகிறார். இதனை சுற்றியுள்ள மக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். யாரும் தடுக்கவில்லை..

இந்நிலையில் வடக்கு டெல்லி கூடுதல் டிசிபி ராஜா பந்தியா கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு (சாஹில்) 20 வயது. குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அவரது பெற்றோர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்..

இதனிடையே டிசிடபிள்யூ தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதாவது, 16 வயது சிறுமி 40-50 முறை கத்தியால் குத்தப்பட்டு, பலமுறை கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பலர் இதைப் பார்த்தார்கள் ஆனால் செவிசாய்க்கவில்லை. டெல்லி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது .யூனியன் ஹெச்எம், டெல்லி எல்ஜி, டிசிடபிள்யூ தலைவர் மற்றும் டெல்லி முதல்வர் ஆகியோருடன் உயர்மட்டக் கூட்டத்தை அழைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.