கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கூண்டு பாலம் அருகே இருக்கும் கால்வாயில் 85 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மயிலாடி கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.