விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கார்த்திகைபட்டியில் ஈஸ்வர அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கம் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவியை ஈஸ்வர அய்யனார் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஈஸ்வர அய்யனாரை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஈஸ்வர அய்யனாருக்கு ஆயுள் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.