கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் பகுதியில் திருவாரூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் தங்கி எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சதீஷுக்கும் சிவபுரியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சதீஷ் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சதீஷுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.