சீனர்கள் கொரோனா தொற்றை விரும்பி வரவழைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இதற்கான காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. கொரோனாவை உலகிற்கு பரிசளித்த சீனாவை கோவிட் 19 வைரஸ் தற்போது அலை அலையாய் தாக்க தொடங்கியுள்ளது. முன்பு போல கடும் கட்டுப்பாடுகளை விதிக்க சீன அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்ததால் அவற்றை அரசும் விலக்கிக் கொண்டது.

இந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது கோவிட் 19 வைரஸ். இதனால் கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருந்துகள் இல்லாமல் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றார்கள். இதற்கிடையே சீன இளைஞர்கள் தங்களுக்கு கொரோனா தொற்றை கூட்டம் கூட்டமாக சென்று வரவழைத்துக் கொள்கின்றன என்கிற தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.

இதற்கான காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சுன்யுன் என்கிற வசந்தகால விழா சீன புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஜனவரி 22ஆம் தேதி முதல் ஒரு வாரம் மட்டுமே அந்நாட்டு அரசு விடுமுறை அளித்துள்ளது. இருந்தாலும் 40 நாட்கள் இந்த புத்தாண்டை சீனர்கள் குடும்பத்தினர்களோடும் உறவினர்களோடும் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

அதாவது ஜனவரி 7ஆம் தேதி கொண்டாட்டத்தை தொடங்கிய சீனர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி வரை தொடர்ந்து கொண்டாடுவார்கள். இதற்கு அரசு அளித்துள்ள ஒரு வார விடுமுறை போதாது என்பதால் தாங்களாகவே எடுத்துள்ள விபரீத முடிவு தான் கொரோனா தொற்றை வரவழைத்துக் கொள்வது. இப்படி செய்வதால் வீட்டிலேயே தங்கள் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் இருந்து கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்கிற எண்ணம் தான் கொரோனாவை அவர்கள் அவர்களாகவே வரவழைத்துக் கொள்வது.

சீன இளைஞர்களின் சிறுவயதனமான இந்த செயலால் உலகமே அதிர்ந்து போய் உள்ளது. 2019 ஆம் ஆண்டிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக சென்று அங்கே திரளாக கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் கொரோனா அசுர வேகத்திற்கு பரவியதாக கூறப்பட்டது. தற்போது ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், பூங்காக்களில் கூட்டம் கூட்டமாக திரண்டு சுன்யுன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் சீனர்கள். இதனால் மீண்டும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளது உலகம்.