கொரோனா மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை கடைசி நாள் கூட்டத்தில் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடிகளை சந்தித்தோம் என கூறினார்.

கொரோனா காலத்தில் முக கவசம் போட்டுக் கொண்டே சட்டசபைக்கு வந்தோம். மேலும் சபையில் தடுப்பு கவசம் கண்ணாடி போட்டு சபையை நடத்தினோம் எனவும் கொரோனா காலகட்டம் குறித்து நெகிழ்ந்து பேசினார். மேலும் கொரோனா காலம் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்றும் கொரோனா வாழ்க்கையில் மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது எனவும் கூறியுள்ளார்.