குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வளாக பகுதிக்குள் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் ஆண் சிங்கம் ஒன்று வந்த வழி தெரியாம நாளாபுரமும் பார்த்தபடி நிறுவனத்திற்குள் உலவியபடி காணப்பட்டுள்ளது. அதன் பின் அந்த சிங்கம் வெளியேறி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் தேடிய போது அந்த சிங்கம் எந்த பகுதிக்கு சென்றது என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. அதனை இதுவரை அதிகாரிகள் பிடிக்கவில்லை. தனியார் நிறுவன வளாகத்திற்குள் ஆண் சிங்கம் உலாவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.