கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் தோப்பு பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பாஸ்கர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பாஸ்கர் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் சாலையில் சென்றபோது குறுக்கே நாய் பாய்ந்தது.

அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சடன் பிரேக் பிடித்த போது நிலைதடுமாறிய பாஸ்கர் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிளோடு மோதினார். இதனையடுத்து தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.