கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து செய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு அம்மாநிலம் பாதிப்படைந்தது.

 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.