தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முதல்வரால் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு CMRF தேர்வுக்கு 4004 பேர் விண்ணப்பித்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.