தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் அருங்காட்சியகம் மற்றும் மணிமண்டபம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.