நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியது இல்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும் என தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.