தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் அருங்காட்சியகம் மற்றும் மணிமண்டபம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்.. திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்க தடை… மாவட்ட காவல்துறை உத்தரவு…!!!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more