தென்காசியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பழனி நாடார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை எளிதில் சந்திக்கலாம்.

காங்கிரஸ் கட்சியின் துண்டுடன் நாங்கள் நின்று கொண்டிருந்தால் அவரே எங்களை அழைத்து பேசுவார். ராகுல் காந்தியை முதல் முறையாக பிரதமர் வேட்பாளராக அறிவித்த பெருமையும் முதல்வர் ஸ்டாலினையே சேரும் என்று கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ எங்களுக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.