மராட்டியத்தில் வைத்து 8-வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் தமிழ்நாடு அணியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 17 பெண்கள், 57 ஆண்கள் என மொத்தம் 74 பேர் விளையாடி உள்ளனர்.

தமிழக அணி 6 தங்க பதக்கங்களை வென்றது. போட்டியின் முடிவில் மொத்தம் 70 பதக்கங்களை வென்று அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி வென்று சாதனை படைத்தது. பின்னர் திருச்சி திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.