சிவகங்கையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று நேற்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.