தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டு வருவதற்கு 3 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை காலதாமதம் ஆவதாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக தற்போது அந்தந்த மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடித்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் தற்போது நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதல் உடன் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு திருமணம் ஆகி ஒரே குடும்பத்தில் வசிபவர்கள் தனியாக ரேஷன் கார்டு பெறக் கூடாது எனவும் பழைய ரேஷன் கார்டில் வேண்டுமானால் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டு குடும்பமாக வசிப்பவர்கள் தனியாக ரேஷன் கார்டு பெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தனி ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.