பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் வைத்திருக்கும் பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, மோடி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் திமுக பேனரில் மோடியா என பலரும் ஆச்சரியமாக பார்த்து அந்த பேனரை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.