நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உறவினர் வீடுகளுக்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் காரில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு இடத்திற்கு சென்று மீட்பு வாகனம் மூலம் காரை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.