சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நிஷாந்த் காரில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் நிலைதடுமாறி நடைபாதை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் சிக்கி இருந்த நிஷாந்தை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.