சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் காரில் இருந்த ஏழு பேரும் காயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று காயமடைந்த ஏழு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.