சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் சொக்கனூரில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி டிரைவராக இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்த வினிதா(22) கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் முகநூல் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் வினிதாவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த வினிதா வீட்டை விட்டு வெளியேறி பாலசுப்பிரமணி சாமி கோவிலில் வைத்து தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இரு தரப்பு பொற்றொறையும் அடைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காதலர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.