திருச்சி மாவட்டம் திருநெடுங்குளத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் கல்லீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தது தெரிய வந்தது. இதயம், நுரையீரல், மயக்க மருந்து நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் அளித்த லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மூலம் கல்லீரலின் வலது பக்கத்தில் இருந்த கட்டி 60% கல்லீரலுடன் சேர்ந்து அகற்றப்பட்டது.

இதயம் வெளியேற்றும் ரத்தத்தில் 25 % கல்லீரலுக்கு செல்வதால் மிகவும் கவனத்துடன் நவீன கருவியை பயன்படுத்தி அனுப்பவம் வாய்ந்த மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையினை செய்து முடித்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் குமாரவேல் தலைமையில் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் மருத்துவர்கள் கண்ணன், ஷங்கர், ராஜசேகரன் கார்த்திகேயன், இளங்கோ, இளவரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் கல்லீரலின் மேற்பகுதியிலிருந்த 1.50 கிலோ எடை உள்ள கட்டி அகற்றப்பட்டது.