ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வாட்ஸ் அப்ல பாத்தோம்னா…  லைன்ல நின்னுட்டு எல்லாருத்துக்கும் நூறு நூறு  ரூபாய் டெலிவரி பண்ணுறாங்க. என்னய்யா 300 ரூபாய் தரேன்னு கூட்டு வந்திங்க…. 500 ரூபாய் தரேன்னு கூட்டு வந்திங்க….  100 ரூபாய் தான்  தரிங்க… என்னய்யா எல்லாத்துக்கும் பிரியானி போடுறேனு சொன்னிங்க…  எல்லாருக்கும் புளிசோறு குடுத்து இருக்கீங்க… இந்த மாதிரி கமெண்ட்ஸ் எல்லாம் நம்ம மாநாடுல வரல.

அதனால தான் சொல்லுறேன்.. மாநாடு நடத்தணும்னு  சொன்னா… எங்களுடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கழகத்தினுடைய கொள்கை பரப்பு செயலாளர் என  அத்தனை பேர் கிட்டயும் இருந்து ட்ரைனிங் எடுத்துக்கோங்க. ட்ரைனிங் எடுத்ததற்கு அப்பறம் நீ பேசு .. அதே மாதிரி தியாகத்தை பத்தியும் பேசாத… எங்களை மாதிரி தியாக மறவர்களே கிடையாது.

என்னை  பொறுத்த மட்டுல்ல சொல்லுறேன்… திருச்சி மாவட்டம் மாதிரி தான் தமிழகம்… அதே மாதிரி தான் அருமை அண்ணன் ஒருங்கிணைப்பாளர்…  அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது இயக்கம். அதே மாதிரி தியாகத்தை பத்தியும் பேசாத…

எங்களை மாதிரி தியாக மறவர்களே கிடையாது.என்னை  பொறுத்த மட்டுல்ல சொல்லுறேன்… திருச்சி மாவட்டம் மாதிரி தான் தமிழகம்… அதே மாதிரி தான் அருமை அண்ணன் ஒருங்கிணைப்பாளர்…  அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது இயக்கம் என தெரிவித்தார்.