தமிழக அரசு ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் நிலையில் மகளிருக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இது மேலும் தமிழகத்தை பாதிக்கும் எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கே.கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை  ஏற்க மறுத்த நீதிபதிகள்,  ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க கூடிய இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.