தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் 99.32 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி இன்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102.38 ஃபாரன்ஹீட், ஈரோட்டில் 101.84 ஃபாரன்ஹீட், சேலத்தில் 100.58 ஃபாரன்ஹீட், கரூரில் பரமத்தியில் 100.4 ஃபாரன்ஹீட்  வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.