இயக்குனரும், பிரபல  நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது அவர் உயிர் பிரிந்தது. இயக்குனரும்,  நடிகருமான மாரிமுத்து (வயது 57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அண்மையில் தொலைக்காட்சி நெடுந்தொடரில் நடித்து மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் மாரிமுத்து.

கண்ணும் கண்ணும், புலி வால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள், ஜெயிலர் ,  வாலி,  உதயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் மாரிமுத்து. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உடலுக்கான சடங்கு  சம்ரதாயங்கள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்படுள்ளது.