சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெல்லை தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு நகர பகுதிகளில் நீர் நிற்கிறது. பேருந்து நிலையங்கள்,  முக்கிய இடங்கள் அனைத்துமே வெள்ள நீரால் மூழ்கி இருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஒரு ரயில் செல்லக்கூடிய பகுதி தடைபட்டு, பயணிகள் ரயிலில்  தவித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதை கண்காணிப்பதற்காக பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் வைக்கப்பட்டிருந்தது.

சென்னை தலைமை செயலகத்திலிருந்து கட்டுப்பாட்டு மையமானது அமைக்கப்பட்டதை போல  நெல்லை, தூத்துக்குடியிலும் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து,  அங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகளை நேரடியாக கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் அந்த கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

காரணம் அங்கு மின் இணைப்பு முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய நெட்வொர்க்களும் தற்போது வேலை செய்யவில்லை. அதன் காரணமாக அங்கு இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.  மாவட்ட ஆட்சியர்களை நேரடியாக சேட்டிலைட் போன் மூலமாக தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து இருக்கிறார்கள்.

என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது ? என்பதை தெரிந்து,  அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உணவுப் பொட்டலங்கள் வழங்கக்கூடிய பணியையும் தொடர்ந்து முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

இறுதியாக கிடைத்த தகவலின் படி பல்வேறு இடங்களில் மத்திய அரசின் என்.டி.ஆர்எப் மற்றும் தமிழக என் டி ஆர் எஃப் டீம் தொடர்ந்து களத்தில் இருக்கிறது. அவர்கள் மீட்பு பணியை முன்னெடுத்து இருக்கிறார்கள்.   தகவல் தொடர்பானது துண்டிக்கப்பட்டிருந்தாலும் எப்படியாவது அவர்களை சேட்டிலைட் போன் மூலமாக தொடர்பு கொண்டு அடுத்த கட்டமாக நிலைமையை சீர் செய்ய முயற்சியை தொடர்ந்து அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.