எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 74,800 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இதை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என திமுகவின் R.S.பாரதி தொடுத்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.