நாடு முழுவதும் தமிழ் உட்பட 13 மொழிகளில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி CAPF தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். CAPF தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத, உதயநிதி போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அரசு பின்வாங்கியது.