மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கில் சில விஷமிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். எனவே, குறுஞ்செய்தியில் வரும் எண்ணை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்; இணைய லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். குறுஞ்செய்தி வந்தவுடன் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கவும்.