ஆசிரியர் ஆசிரியர் அல்லாத – பணியாளர்களுக்கான குறைதீர் புலம் (இணையதளம் & செயலி) வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், டெட் தேர்வு ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது; விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்.