ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.