ஜே.என்.1 என்ற புதிய கொரோனா வைரஸ் பரவல் கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு தொற்று உறுதியானதால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 4054ஆக உயர்ந்துள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை கவலையடைய வேண்டாம் என்று சொன்னாலும், கொரோனா பரவல் மக்களை பீதியடையவே செய்கிறது.